திங்கள், மார்ச் 31, 2008

மீண்டும்..... காதல் :)

[எந்த காரணத்துக்காக சென்றேனோ அது நினைத்தபடி போகாததால் (வழக்கம்போல்) திரும்பிவிட்டேன்! அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)]



பட்டின் இறகுகள்,
தென்றல் தொடத்துடிக்கிறது...
உன் கண்கள் தழுவிய
என் விரல்கள் போல்


பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல்

மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்


இலைகள் போர்த்தி,
ஈரமணல் நுகரத்துடிக்கிறது...
உன் கூந்தல் மூடிய
என் முகம் போல்

பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்

'

'

ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)

21 கருத்துகள்:

நிவிஷா..... சொன்னது…

Asusuall your poem rocks,
very nicely compared:-)

\\பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்\\

Superuuuu lines:)

romba romba feel pani , anupavitchu elithirukireenga, nalla iruku kavitha!!

natpodu
Nivisha.

KARTHIK சொன்னது…

// நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)] //

கண்டிப்பாக :-))

// பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல் //

// ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :) //

அற்ப்புதம் சதீஷ்
எல்லாமே அனுபவித்து எழுதின மாதிரி இருக்கு.

நல்லாருக்கு.

KARTHIK சொன்னது…

// romba romba feel pani , anupavitchu elithirukireenga, nalla iruku kavitha!!//

காஞ்சனை சொன்னது…

இயற்கையோடு இழைந்து துள்ளலாட்டம் போடுகிறது காதல். கூடவே இந்தக் கவிதையிலும்... ;-))

காஞ்சனை சொன்னது…

//அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான்//

அதானே! வாங்க.. வாங்க. நாம பாட்டுக்கு எப்பவும் போல கிறுக்கலாம்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

சதீஷ்..:))
மீண்டு(ம்) வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.... மீண்ட காதலா..? இல்லை மீண்டும் காதலா...??? :)))

ஸ்பரிசிக்க தூண்டுவது
வரிகள் மட்டும் அல்ல....
இந்த உணர்வுகளையும் தான்.... :)))

Divya சொன்னது…

அழகான வார்த்தைகளோடு,
அசத்தலான கவிதை!!

வாழ்த்துக்கள் சதீஷ்.

\\மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்\

Nice lines!!!

Praveena சொன்னது…

கவிஞனின் கற்பனைகளுக்கும், எழுத்திற்கும் வேலியும் தடையும் ஏது???

மீண்டும் எழுத முனைந்தது நன்று:-)


\\பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்\

காதலின் நெருக்கம் இதமாக வெளிப்படுத்தும் வரிகள்,
அருமை சதீஷ்:-)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நிவிஷா..... said...
Asusuall your poem rocks,
very nicely compared:-)
\\பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்\\

Superuuuu lines:)

romba romba feel pani , anupavitchu elithirukireenga, nalla iruku kavitha!!

natpodu
Nivisha.
//

வாங்க நட்பு :)

பாராட்டிற்கு நன்றி!

ஃபீல் பண்ணி எழுதியிருக்கலாம் ஆனா அனுபச்சியெல்லாம் கிறுக்கலீங்கொவ்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
// நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)] //

கண்டிப்பாக :-))

// பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல் //

// ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :) //

அற்ப்புதம் சதீஷ்
எல்லாமே அனுபவித்து எழுதின மாதிரி இருக்கு.

நல்லாருக்கு.
//

வாங்க கார்த்திக் :)

அட நீங்களுமா :)) மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

/சகாரா said...
இயற்கையோடு இழைந்து துள்ளலாட்டம் போடுகிறது காதல். கூடவே இந்தக் கவிதையிலும்... ;-))
//

துள்ளலாட்டமா?? மிக்க நன்றி சகாரா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஸ்ரீ said...
:))
//
((:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
சதீஷ்..:))
மீண்டு(ம்) வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.... மீண்ட காதலா..? இல்லை மீண்டும் காதலா...??? :)))
//

அட இது நல்லா இருக்கே! கவிஞரின் வரிகளாயிற்றே கேட்க வேண்டுமா என்ன :))

//ஸ்பரிசிக்க தூண்டுவது
வரிகள் மட்டும் அல்ல....
இந்த உணர்வுகளையும் தான்.... :)))
//

அப்படியா நவீன் :)) மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
அழகான வார்த்தைகளோடு,
அசத்தலான கவிதை!!

வாழ்த்துக்கள் சதீஷ்.

\\மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்\

Nice lines!!!
//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திவ்யா!!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
கவிஞனின் கற்பனைகளுக்கும், எழுத்திற்கும் வேலியும் தடையும் ஏது???

மீண்டும் எழுத முனைந்தது நன்று:-)


\\பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்\

காதலின் நெருக்கம் இதமாக வெளிப்படுத்தும் வரிகள்,
அருமை சதீஷ்:-)
//

தங்களின் கவிதைகளை விட அழகாக வெளிப்படுத்த முடியுமா என்ன :)))

பாராட்டுக்களுக்கு நன்றி இப்ரவீனா!!

தினேஷ் சொன்னது…

கவிதையா காதல் மழையா...

சாரலில் நனைந்தபடி,
தினேஷ்

Sanjai Gandhi சொன்னது…

//ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)//

அட அட.. எங்கயோ போய்ட்டிங்க சதிஷ்..:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
கவிதையா காதல் மழையா...

சாரலில் நனைந்தபடி,
தினேஷ்
//

சாரலில் நனைந்தமைக்கு நன்றி தினேஷ் :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//SanJai said...
//ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)//

அட அட.. எங்கயோ போய்ட்டிங்க சதிஷ்..:)
//

வாங்க SanJai!

முதல் வரவு நல்வரவாகட்டும்!

அட! எங்கயும் போகலீங்க இங்கனயேத்தான் இருக்கேன் :)))

நன்றி SanJai

வினையூக்கி சொன்னது…

திரும்ப காதல் கவிதையுடன் வந்தமைக்காக புன்னகை பின்னூட்டம்

ஜி சொன்னது…

arumai :))