செவ்வாய், மே 25, 2010

நதி...


இருவேறு ஆறுகளாய்
பயணித்த வெள்ளம்
ஒரே நதியாய்
இணையும் நன்நாளில்...
'
'தீதும் நன்றும்
பிறர்தர வாரா'
'
தீதாய் நிற்கும் கற்களை
நதி அடித்துச்செல்லட்டும்
'
வழிமறிக்கும் பாறைகளை
நதி மோதித்தாண்டட்டும்
'
இடைவரும் மலைகளை
நதி விட்டுவிலகிச்செல்லட்டும்
'
அரணாய் நிற்கும்
கரைகளாகும் பந்தங்களை
நதி சோலையாக்கித்தழுவட்டும்
'
இதுவே நதியாகிய
வாழ்க்கை பயணத்தின்
சாராம்சமாயாகட்டும்...
'
மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை தோழமைக்காய்...

திங்கள், மார்ச் 29, 2010

நான்... அலை


யுகங்கள் பல கடந்துவந்தேன்,
தேடல் இன்னும் தொடர

தோன்றலும் கறைதலும்
மீண்டும் பிறத்தலும் பின்
மறைதலுமாய் காலனை
வென்றுவந்தேன், என்
தேடல் இன்னும் தொடர

பஞ்சபூதங்களின் குழந்தை நான்,
பின்னே கடல்
முன்னே மணல்
நடுவே என் பயணம்,
இல்லா சுவடுகள் தேடி

மீண்டும் பிறந்து வந்தேன்
கரையில் கறைய, என்
தேடல் இன்னும் தொடர...