திங்கள், மே 19, 2008

நீர்தனில்...

'
மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்

குளத்தின் ஆழம்
குடித்து மூழ்குகிறேன்

நதியின் வேகம்
எதிர்த்து மறைகிறேன்

கடலின் பிரம்மாண்டம்
கண்டு மயங்குகிறேன்

இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்

நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!