தூரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 29, 2006

ஏமாற்றங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விடிவெள்ளியின்
தரிசனத்திற்காக
முன்னிரவிலிருந்து
விழித்திருந்து
உச்சகாட்சியில்
கண்கள் மூடிவிட்ட
விடிகாலை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசையாய்
மத்தாப்பு கொளுத்த
வேகமாய் வர
தீபாவளி இரவில்
முந்திக்கொண்ட மழை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விளையாட்டாய்
பிடித்து வைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கேட்க நினைத்த கேள்விகள்,
யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மொழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மனதில் ஆழமாய் 
வேர்கொண்டும்
முளைக்க நீரின்றி
முடங்கிப்போன
கனவுவிதைகள்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - தொடரலாம்...

சனி, டிசம்பர் 02, 2006

துளிகள் II

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இல்லை

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...

அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...

காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருவதில்லை

சூழும் பனியை தீ மூட்டி சுட்டபோது
தொலைவில் நடுங்கும் நாய்குட்டியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

இலையில் கசிந்த பனிநீரை ருசித்தபோது

மலர துடித்து பனியில் உறைந்த மொட்டை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

சொகுசு பேருந்தில் சொகுசாய் பயணிக்கும்போது

ஜன்னலின் அருகே கையேந்தும் சிருமியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

நிஜமொன்று இருக்கும்
போதும்
நிழல் மட்டும் சொந்தமாவதை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !


எனக்கு ஒரு கவிதை எழுத வருவதில்லை !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள்

அவள் - தூரும் மழையின் சாரலை
ஜன்னலோரமாய் இரசிக்க வைத்தவள்

அவள் - வானவில்லின் வண்ணங்களில்
என்னை ஓவியம் தீட்டவைத்தவள்

அவள் - என் தாய்மொழியில்
என்னை கவிஞனாக்கியவள்

அவள் - பூக்களின் மேல் என்னை
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாக்கியவள்

அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்

அவள் - பூவின் இதழ்களை வருடக்கூட
எனக்குள் பயம் கொடுத்தவள்

அவள் - பின்னொரு மாலையில் கண்களை
வற்றா நீர்தேக்கமாக்கிப்போனவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...

திங்கள், செப்டம்பர் 18, 2006

இரசித்தவை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் சாம்பல் ஆனாலும்

என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீது உனக்காக

சில பூக்கள் பூக்குமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீ
மடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்பத்தில் பிறந்து இன்பதில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடவுள் மனிதனை படைத்தானா

கடவுளை மனிதன் படைத்தானா

இரண்டு பேரும் இல்லையே ரொம்பத்தொல்லையே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனதினில் பலகோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

திங்கள், செப்டம்பர் 04, 2006

இரசித்தவை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த‘ மல்டி டாஸ்கிங்’

-கவிஞர் நவீன் ப்ரகாஷ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவசரமாய் எழுதிய கவிதைகளில்
என் தோழியாய் இருந்தாய்
நீ பிரிந்து சென்றபின்
ஓர் பௌர்ணமி இரவில்
படித்துவிட்டு கலங்கினேன்
என் காதலியாய் இருந்திருக்கிறாய்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை...
மண்வாசத்தில் நனைகிறது உயிர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

-கவிஞர் அறிவுமதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உள்ளயர்ந்த
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்...

- Unknown
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

வியாழன், ஆகஸ்ட் 24, 2006

புன்னகைகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கையிலேந்தி
உலாவியபோது
சட்டென்று
கழுத்தைப்பற்றி
கன்னத்தில் முத்தமிட்ட
மழலை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தீபாவளி இரவில்
வெடிகள் தீர்ந்துபோக
வெடிக்கமறுத்திருந்த
வெடிகளின் மருந்துகளில்
சொக்கபானம் வைத்து
வேடிக்கை காட்டிய
அண்ணன்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விலகிச்செல்லும்
இரயிலின் வாசலோரமாய்
மோழியாத வார்த்தைகளை
வெல்லுமாறு கண்ணீர்
கலந்த புன்னகையுடன்
கடைசியாய்
கையசைத்த அவள்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தொடரும்...

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

துளிகள் I

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவளாய்

சிலநிமிடங்களில் சேயாய்
பலதருணங்களில் தாயாய்
அன்னையாய் தோழி,
பலகணங்களில் சேயாய்
சிலகாலங்களில் தாயாய்
அன்பாய் காதலி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓவியம்


இதழ்களால் உச்சரித்து
கண்களால் வழிகாட்டி
விரல்களால் பேனாவை இயக்கி
ஓர் ஓவியம் கவிதை வரைவதை
தரிசித்தேன் - அவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை...

கவிதை இயற்ற எத்தனித்தேன்
அவனுக்கு ஈடாய்,
ஆனால் என்செய்வேன் தோற்றுப்போனேன்...
உனை போன்ற அழகிய கவிதை வடிக்க

அவனால் மட்டுமே முடியும் - இறைவன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபம்...

பூப்போன்ற இட்லிக்கு கோபம்,
பூவைவிட மென்மையான
அவள் விரல்கள் படாதபடி
இடையில் நீள்கிறது தேக்கரண்டி!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வடித்ததில்லை...

வடித்ததில்லை - கருப்புத்திரையில் பயணிக்கும்
வெள்ளை பௌர்ணமியை கவிதையில்
வடித்தவர் மத்தியில்,
வெள்ளைத்திரையில் உலாவும்
அவள் கருப்பு விழியைப்பற்றி கவிதை
இதுவரை எவரும் வடித்ததில்லை!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவும் பகலும்...

ஒளி வீசும் ஞாயிரை எந்திய பகலாய்
பிரகாசமான அவள் முகம்,
அதை தழுவியபடி;
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை தாங்கிய இரவாய்,
நீர்த்துளிகள் கோர்த்த
(துவட்டப்படாத) அவள் கூந்தல்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...