வியாழன், ஜூலை 26, 2007

வேண்டும்...


எதையும் நினையா ஓர் நிமிடம்
எவரையும் எண்ணா ஓர் எண்ணம்


தனித்து இல்லாமல் ஓர் தனிமை
அந்த தனிமைக்குள்ளே ஓர் முழுமை

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்

தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

மூடிகள் இல்லா ஓர் முகம்
எதிர்பார்ப்புகள் இல்லா ஓர் உயிர்

அனைவரும் சமமாய் ஓர் பார்வை
ஒரே பார்வை அது அனைவருக்கும்

நல்லவை மறக்கா ஓர் மனிதம்
எதையும் மறைக்க ஓர் சுதந்திரம்

இயல்பை மாற்றா ஓர் நெஞ்சம்
எதர்க்கும் நடிக்கா ஓர் இதயம்

இழப்புகளை ஏர்க்கும்
மனம்
இழந்த
வர்க்காய் ஏங்கா மனபக்குவம்

காரணம் அற்ற ஓர் கடவுள்
சம்பிரதயங்கள் இல்லா ஓர் அன்பு

இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை

கவிதைகள் இல்லா ஓர் தேவை
தேவைகள் இல்லா ஓர் கவிதை

விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்


வேண்டாம் வேண்டாம்

எதுவும் வேண்டாம்
ஆசைகள் இல்லா ஒர் மனம்
அதுவே என்றும் வேண்டும்.....

வெள்ளி, ஜூலை 06, 2007

பயணத்தில்...


வசந்தத்தில் ஓர் நாள் அது
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது

சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்

வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்

தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
மட்டும் ஏராளம்

துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை

உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்

லீலைகளில் இத்தோற்றமின்றி
இறையில் ஏது அர்த்தம்
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் ஏது அர்த்தம்

ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது

பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்

நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...