ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

தொலைவு...


தினமும் கடக்கும்
விடியலில் காத்திருந்தும்
இந்த விடியலிலும்
மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே
உன் தொலைவை
திறக்க முயலாமல்
இந்த விடியலும்
கடந்து போக
மலரா இந்த
இரவின் அகாலத்தில்,
அர்த்தம் தொலைத்த
மெளனத்தின் இரங்கல்
புன்னகையுடன், நான்
தொலைந்து நிற்கின்றேன்...

சனி, ஆகஸ்ட் 16, 2008

புனல் திருடி!!

'

அலையாய் எனை விரட்டப்பார்பாயோ!

ஏ கடலே! கேள்...

உன்னிலிருந்து...

...நீர் கவர்ந்து சென்று,

உனை மணல் கொண்டு மூடுவேன்!!

கிளிக்கிய இடம் : விர்ஜினியா கடற்கரை!

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

மழைக்காலம்!


அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்

நினைவுகளின் தூறலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்

விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்

தூறலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது

அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்!