ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

தொலைவு...


தினமும் கடக்கும்
விடியலில் காத்திருந்தும்
இந்த விடியலிலும்
மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே
உன் தொலைவை
திறக்க முயலாமல்
இந்த விடியலும்
கடந்து போக
மலரா இந்த
இரவின் அகாலத்தில்,
அர்த்தம் தொலைத்த
மெளனத்தின் இரங்கல்
புன்னகையுடன், நான்
தொலைந்து நிற்கின்றேன்...

25 கருத்துகள்:

ஜியா சொன்னது…

ஓ!! அப்படி.. அப்ப ஓகே...

Ramya Ramani சொன்னது…

\\இந்தஇரவின் அகாலத்தில்,அர்த்தம் தொலைத்தமெளனத்தின் இரங்கல்புன்னகையுடன், நான்தொலைந்து நிற்கின்றேன்...\\

செம்ம பீலிங்க்ஸ் போல யாரது சொல்லவேயில்ல...

Unknown சொன்னது…

அச்சச்சோ அண்ணா நல்லாருக்கு..!! :)) ஆனா என்ன ஆச்சு உங்களுக்கு?? நல்லாருக்கீங்களா??

KARTHIK சொன்னது…

// மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி //

நல்லாருக்கு சதீஷ்

Thayumanavan Mathikumar.. சொன்னது…

Nanba Nalla thane iruntha.....

Enna aatchu thedirnu....

Divya சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு சதீஷ்:))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
ஓ!! அப்படி.. அப்ப ஓகே...
//

கரேக்ட் அப்படி தான் :) நன்றி மாப்பி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Ramya Ramani said...

செம்ம பீலிங்க்ஸ் போல யாரது சொல்லவேயில்ல...
//

நீங்க கேட்கவே இல்ல :)) அதெல்லாம் இருக்கடும், அதானே யாரது!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Sri said...
அச்சச்சோ அண்ணா நல்லாருக்கு..!! :)) ஆனா என்ன ஆச்சு உங்களுக்கு?? நல்லாருக்கீங்களா??
//

நல்லாத்தாம்மா இருக்கேன் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
// மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி //

நல்லாருக்கு சதீஷ்
//

மிக்க நன்றி கார்த்திக் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Mathi... said...
Nanba Nalla thane iruntha.....

Enna aatchu thedirnu....
//

ippavum nallaathaan nanba iruken :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
கவிதை நல்லாயிருக்கு சதீஷ்:))
//

Nanri Master :)

பெயரில்லா சொன்னது…

அய்யோ நல்லா இருந்த பையனுக்கு என்னம்மோ ஆச்சு!உங்களுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சுட்டா இந்த மாதிரி கவுஜ எல்லாம் வராது :)
நாங்களும் உங்க கவுஜ மழையில் இருந்து தப்பிச்சுடலாம் :D

பெயரில்லா சொன்னது…

கவிதை புரிஞ்சுட்டுச்சின்னு நினைக்கிறேன் :D

Thayumanavan Mathikumar.. சொன்னது…

///மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே///

இந்த வரி ரொம்ப நல்லாயிருக்குடா!!

MSK / Saravana சொன்னது…

மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அர்த்தம் தொலைத்தமெளனத்தின்
இரங்கல்புன்னகையுடன், நான்தொலைந்து நிற்கின்றேன்...//

அடடடடடா....சதீஷ் அடிக்கடி உங்க மெளனம் அர்த்தத்தை
தொலைத்துவிட்டு நிற்கிறதா...?? கண்டுபிடிசுட்டீங்களா
உங்களை...??
;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

தொலைவு அதிகமானதால்
தொலைதலும் அதிகமாகிறதோ...???

ரசித்தேன்... அழகு...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
அய்யோ நல்லா இருந்த பையனுக்கு என்னம்மோ ஆச்சு!உங்களுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சுட்டா இந்த மாதிரி கவுஜ எல்லாம் வராது :)
நாங்களும் உங்க கவுஜ மழையில் இருந்து தப்பிச்சுடலாம் :D
//

நல்ல எண்ணம்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

/துர்கா said...
கவிதை புரிஞ்சுட்டுச்சின்னு நினைக்கிறேன் :D
//

ரொம்ப நன்றி துர்கா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Mathi... said...
///மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே///

இந்த வரி ரொம்ப நல்லாயிருக்குடா!!
//

நன்றி நண்பா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Saravana Kumar MSK said...
மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..
//

மனதை நெருங்கிவிட்டதா :) நன்றி சரவணக்குமார்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
//அர்த்தம் தொலைத்தமெளனத்தின்
இரங்கல்புன்னகையுடன், நான்தொலைந்து நிற்கின்றேன்...//

அடடடடடா....சதீஷ் அடிக்கடி உங்க மெளனம் அர்த்தத்தை
தொலைத்துவிட்டு நிற்கிறதா...?? கண்டுபிடிசுட்டீங்களா
உங்களை...??
;))))
//

தேடல்களுக்கு முடிவேது நவீன் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
தொலைவு அதிகமானதால்
தொலைதலும் அதிகமாகிறதோ...???

ரசித்தேன்... அழகு...
//

நன்றி தோழரே!

Keerthi சொன்னது…

Very nice......lovely...........nalla anubavichu yeluthi irukeenga.......... :)