புதன், மே 13, 2009

இலையுதிரா காலம்


முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்

கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்

அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி

ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!