திங்கள், செப்டம்பர் 18, 2006

மழை... மனம்... காதல்...


மழை துளியில் ஒளியின் சிதறல்
வின்னில் வானவில்...
என் விழித்திரையில் அவள் பிம்பத்தின் சிதறல்
மனதில் காதல்...

சிப்பி என்னும் கூட்டிற்குள்
மழைத்துளியின் குடியிருப்பு முத்து...
என் மனதெனும் வீட்டிற்குள்
அவளின் குடியிருப்பு காதல்...

மணல் மேட்டுடன் மழைதுளியின்
கூடல் மண்வாசனை...
என் மனதெனும் ஏட்டுடன் அவள்
விழித்துளியின் கூடல் காதல்...

விளைநிலத்தில் மழைத்துளியின்
சங்கமம் தானியம்...
மனதில் அவளுடனான நொடிகளின்
சங்கமம் காதல்...

மலரின் இதழ்களில்
மழையின் துளிகள் - அழகிய காட்சி...
மனதின் அறைகளில்
அவளின் நினைவுகள் - அழகிய காதல்...

இரசித்தவை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் சாம்பல் ஆனாலும்

என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீது உனக்காக

சில பூக்கள் பூக்குமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீ
மடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்பத்தில் பிறந்து இன்பதில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடவுள் மனிதனை படைத்தானா

கடவுளை மனிதன் படைத்தானா

இரண்டு பேரும் இல்லையே ரொம்பத்தொல்லையே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனதினில் பலகோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

திங்கள், செப்டம்பர் 04, 2006

இரசித்தவை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த‘ மல்டி டாஸ்கிங்’

-கவிஞர் நவீன் ப்ரகாஷ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவசரமாய் எழுதிய கவிதைகளில்
என் தோழியாய் இருந்தாய்
நீ பிரிந்து சென்றபின்
ஓர் பௌர்ணமி இரவில்
படித்துவிட்டு கலங்கினேன்
என் காதலியாய் இருந்திருக்கிறாய்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை...
மண்வாசத்தில் நனைகிறது உயிர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

-கவிஞர் அறிவுமதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உள்ளயர்ந்த
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்...

- Unknown
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...