வியாழன், ஜூலை 26, 2007

வேண்டும்...


எதையும் நினையா ஓர் நிமிடம்
எவரையும் எண்ணா ஓர் எண்ணம்


தனித்து இல்லாமல் ஓர் தனிமை
அந்த தனிமைக்குள்ளே ஓர் முழுமை

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்

தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

மூடிகள் இல்லா ஓர் முகம்
எதிர்பார்ப்புகள் இல்லா ஓர் உயிர்

அனைவரும் சமமாய் ஓர் பார்வை
ஒரே பார்வை அது அனைவருக்கும்

நல்லவை மறக்கா ஓர் மனிதம்
எதையும் மறைக்க ஓர் சுதந்திரம்

இயல்பை மாற்றா ஓர் நெஞ்சம்
எதர்க்கும் நடிக்கா ஓர் இதயம்

இழப்புகளை ஏர்க்கும்
மனம்
இழந்த
வர்க்காய் ஏங்கா மனபக்குவம்

காரணம் அற்ற ஓர் கடவுள்
சம்பிரதயங்கள் இல்லா ஓர் அன்பு

இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை

கவிதைகள் இல்லா ஓர் தேவை
தேவைகள் இல்லா ஓர் கவிதை

விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்


வேண்டாம் வேண்டாம்

எதுவும் வேண்டாம்
ஆசைகள் இல்லா ஒர் மனம்
அதுவே என்றும் வேண்டும்.....

3 கருத்துகள்:

Divya சொன்னது…

\\தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்\\

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


\\விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்\

ஜனனமும் மரணமும் இறைவன் கைகளில், என் செய்வது?

அருமையான கவிதை, பாராட்டுக்கள்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

நன்றி திவ்யா. உங்களின் பாராட்டுக்கள் நான் எதிர்பாராது கிடைத்த பரிசு! எழுத்துக்களில் பிழைகள் எதேனும் இருந்தாலும் தெரிவியுங்கள்

Rasiga சொன்னது…

\\இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை\\

இத்தகைய தோழமை
கிடைத்த
வாழ்வே இனிமை!!


\\இழப்புகளை ஏர்க்கும் மனம்
இழந்தவர்க்காய் ஏங்கா மனபக்குவம்\\

எதிர்பார்ப்புகளற்ற நெஞ்சம்
ஏமாற்றங்களை தாங்கும் இதயம்


வார்த்தைகளின் அழகு வியக்க வைத்தது,நிறைய வார்த்தைகளை கற்றுக்கொண்டேன் இக்கவிதையில், வாழ்த்துக்கள் சதீஷ்.