செவ்வாய், மே 25, 2010

நதி...


இருவேறு ஆறுகளாய்
பயணித்த வெள்ளம்
ஒரே நதியாய்
இணையும் நன்நாளில்...
'
'தீதும் நன்றும்
பிறர்தர வாரா'
'
தீதாய் நிற்கும் கற்களை
நதி அடித்துச்செல்லட்டும்
'
வழிமறிக்கும் பாறைகளை
நதி மோதித்தாண்டட்டும்
'
இடைவரும் மலைகளை
நதி விட்டுவிலகிச்செல்லட்டும்
'
அரணாய் நிற்கும்
கரைகளாகும் பந்தங்களை
நதி சோலையாக்கித்தழுவட்டும்
'
இதுவே நதியாகிய
வாழ்க்கை பயணத்தின்
சாராம்சமாயாகட்டும்...
'
மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை தோழமைக்காய்...

3 கருத்துகள்:

Epitome சொன்னது…

Good 1 da...

K.D.K சொன்னது…

nice.

பெயரில்லா சொன்னது…

அருமை
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com