சனி, ஜனவரி 05, 2013

நவிரம்




வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க
தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த

வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க
இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க

பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச
கவிதைகள்  காத்திருக்கின்றன உன் வரிகள்  ஏற்க

நிகழ்வுகள் காத்திருக்கின்றன உன் கனவுகள் சேர்க்க
கனவுகள்  காத்திருக்கின்றன உன் காலங்கள் கோர்க்க

சிகரங்கள் காத்திருக்கின்றன நீ நவிரம் தொட
யாவரும் காத்திருக்கிறோம் மழலை உன் மெய் கான

கருத்துகள் இல்லை: