செவ்வாய், ஜூலை 15, 2008

வெறுமை...


கால்தடம் பதியா கடற்கரையின்
மிருதுமணல் தழுவிச்செல்லும்
நுரைகளின் வெடிப்பில்!

கவிபடைக்கும் கண்கள் காணா
கானகத்தின் ஊடே இதழ்மலர்ந்த
பூக்களின் சிரிப்பில்!

நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!

முற்றுபெற்ற நிகழ்வுகளின்
முற்றுபெறா நினைவுகளின்
விழிவழி தனிமை நீரில்!

கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்!

நூற்றாண்டுகளை கடக்கும்
ஆசையை திணிக்கும்
நகரா இந்த நொடிகளில்!


என எதிலெதிலோ
தேடமுயல்கிறேன்
உயிருணர்த்தும்
சில வலிகளை...

15 கருத்துகள்:

Divya சொன்னது…

\என எதிலெதிலோதேடமுயல்கிறேன்உயிருணர்த்தும்சில வலிகளை...\


வெறுமையின் தேடல் வார்த்தைகளில் தெரிகிறது...:((

பெயரில்லா சொன்னது…

கவிஞரே உங்க கவிதையில்
தனிமை,கொடுமை,வெறுமை எல்லாமே தெரியுதே!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

கவிஞருக்கு என்ன வெறுமை.?? :)))

வலியுணர்த்தும் வழித்தடங்கள்
எங்கும் சிதறிக்கிடக்கின்றன
புலராத மொழிகள்... :)))

KARTHIK சொன்னது…

// கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்! //

நீங்க என்ன சொல்லவரிங்க

எதோ காதல் தோல்வில எழுதின மாதிரி இருக்கு.

வித்தியாசமா இருக்கு.

Unknown சொன்னது…

//நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!//

Superb lines anna..!! :-)
Not only these lines i like all the lines..!!
superb....!! :-)

ஜி சொன்னது…

Chanceless Satish.... ellaa linesum semaiyaa irukuthu... enga irunthuthaan pudikireengalo...

kalakkunga :)))

தினேஷ் சொன்னது…

வெறுமை கவிதையை அருமையா இருக்கு...

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
\என எதிலெதிலோதேடமுயல்கிறேன்உயிருணர்த்தும்சில வலிகளை...\


வெறுமையின் தேடல் வார்த்தைகளில் தெரிகிறது...:((
//

தெரிகிறதா :) அப்பாட அப்ப கவுஜ புரிந்துடுசு!!!

நன்றி திவ்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Anonymous said...
கவிஞரே உங்க கவிதையில்
தனிமை,கொடுமை,வெறுமை எல்லாமே தெரியுதே!
//
அப்படினா உங்கலுக்கும் புரிந்துவிட்டது என அர்த்தம் :)) நன்றி!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
கவிஞருக்கு என்ன வெறுமை.?? :)))
//

என்ன எழுதுவதுனு தெரியாததாலயோ என்னவோ :)

//வலியுணர்த்தும் வழித்தடங்கள்
எங்கும் சிதறிக்கிடக்கின்றன
புலராத மொழிகள்... :)))//

நன்றி நவீன் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...

கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்! //

நீங்க என்ன சொல்லவரிங்க

எதோ காதல் தோல்வில எழுதின மாதிரி இருக்கு.

வித்தியாசமா இருக்கு.//

இதுல காதல் எங்க இருக்கு!! இன்னொருமுறை வாசித்து பாருங்களேன் :)

வருகைக்கு நன்றி கார்த்திக்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Sri said...
//நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!//

Superb lines anna..!! :-)
Not only these lines i like all the lines..!!
superb....!! :-)
//

ரொம்ப நன்றி சகோதரி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
Chanceless Satish.... ellaa linesum semaiyaa irukuthu... enga irunthuthaan pudikireengalo...

kalakkunga :)))
//

ஆஹா!!! ரொம்ப புகழாதீங்க ஜீ! வெட்கமா இருக்கு ஹி ஹி :))

நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
வெறுமை கவிதையை அருமையா இருக்கு...

தினேஷ்
//
நன்றிகள் பல தினேஷ் :)

MSK / Saravana சொன்னது…

// Divya said...
வெறுமையின் தேடல் வார்த்தைகளில் தெரிகிறது...:((
//

அதேதான்.. So.. ரிப்பீட்டு..