வெள்ளி, டிசம்பர் 29, 2006

ஏமாற்றங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விடிவெள்ளியின்
தரிசனத்திற்காக
முன்னிரவிலிருந்து
விழித்திருந்து
உச்சகாட்சியில்
கண்கள் மூடிவிட்ட
விடிகாலை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசையாய்
மத்தாப்பு கொளுத்த
வேகமாய் வர
தீபாவளி இரவில்
முந்திக்கொண்ட மழை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விளையாட்டாய்
பிடித்து வைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கேட்க நினைத்த கேள்விகள்,
யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மொழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மனதில் ஆழமாய் 
வேர்கொண்டும்
முளைக்க நீரின்றி
முடங்கிப்போன
கனவுவிதைகள்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - தொடரலாம்...

3 கருத்துகள்:

Divya சொன்னது…

\\விளையாட்டாய்
பிடித்துவைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி...\\

இதே ஏமாற்றம் எனக்கும் ஏற்பட்டிருக்கு,
இந்த வரிகள் படிக்கிறப்போ ரொம்ப கஷ்டமாக இருந்தது.

Divya சொன்னது…

\\கேட்க நினைத்த கேள்விகள்,
யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மோழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்...\\

அழகான வரிகள்,
பொருத்தமான படம்.......அசத்தல்!

பெயரில்லா சொன்னது…

Really very very nice kavithai..!!
True lines..!!