புதன், ஜனவரி 24, 2007

இயற்கையே என்னில் வா


விதையாய் மேட்டில் வீழ்ந்துகிடக்கின்றேன்
மணலாய் நிலமே என்னில் வா

தளிராய் பாறையில் முளைத்து நிற்கின்றேன்
மழையாய் நீரே என்னில் வா

விளக்காய் இருள்மூடக்கிடக்கின்றேன்
ஒளியாய் நெருப்பே என்னில் வா

இலையாய் கிளையிடுக்கில் சிக்கித்தினருகின்றேன்
சுவாசமாய் காற்றே என்னில் வா

அனுக்களின் கூட்டாய் முடங்கிக்கிடக்கின்றேன்
பிரபஞ்சமாய் வெளியே என்னில் வா

பூவாய் பாலையில் மலர்ந்து நிற்கின்றேன்
வண்டாய் உயிரே என்னில் வா

நிலவாய் இரவின் பாதையில் நடக்கின்றேன்
ஞயிராய் ஒளியே என்னில் வா

சூரியனாய் அனல்பறக்க பகலில் பயனிக்கின்றேன்
நிலவாய் குளிர்ச்சியே என்னில் வா

அனுக்களில் பதிந்து கிடக்கின்றேன்
விடுதலையாய் சக்தியே என்னில் வா

உணர்வுகள் வழிகாட்ட அதில் நடக்கின்றோம்
உணர்ச்சிகள் ஆட்டுவிக்க அதில் திளைக்கின்றோம்
இயல்பே அந்த உண்மையாய் எங்களில் வா
இயலே அந்த தெளிவாய் எங்களில் வா

இயலை தேடி நடக்கின்றேன்
அதன் இயல்பை உணர துடிக்கின்றேன்
இயலே என்னில் வா
அந்த இறையே என்னில் வா

கவிதையாய் வாழ வழியில்லை
அதனால் தானே கவிதை எழுதி வாழுகின்றேன்
இயற்கையொடு வாழ இயழவில்லை
அதனால் நானே வாடுகின்றேன்

இனியும் இயங்க வலுவின்றி
இயற்கை எய்துகின்றேன் இன்று நான்
அந்த கவியே என்னில் வா
கவிதையாய் அந்த இயற்கையே என்னில் வா...

கருத்துகள் இல்லை: