
விதையாய் மேட்டில் வீழ்ந்துகிடக்கின்றேன்
மணலாய் நிலமே என்னில் வா
தளிராய் பாறையில் முளைத்து நிற்கின்றேன்
மழையாய் நீரே என்னில் வா
விளக்காய் இருள்மூடக்கிடக்கின்றேன்
ஒளியாய் நெருப்பே என்னில் வா
இலையாய் கிளையிடுக்கில் சிக்கித்தினருகின்றேன்
சுவாசமாய் காற்றே என்னில் வா
அனுக்களின் கூட்டாய் முடங்கிக்கிடக்கின்றேன்
பிரபஞ்சமாய் வெளியே என்னில் வா
பூவாய் பாலையில் மலர்ந்து நிற்கின்றேன்
வண்டாய் உயிரே என்னில் வா
நிலவாய் இரவின் பாதையில் நடக்கின்றேன்
ஞயிராய் ஒளியே என்னில் வா
சூரியனாய் அனல்பறக்க பகலில் பயனிக்கின்றேன்
நிலவாய் குளிர்ச்சியே என்னில் வா
அனுக்களில் பதிந்து கிடக்கின்றேன்
விடுதலையாய் சக்தியே என்னில் வா
உணர்வுகள் வழிகாட்ட அதில் நடக்கின்றோம்
உணர்ச்சிகள் ஆட்டுவிக்க அதில் திளைக்கின்றோம்
இயல்பே அந்த உண்மையாய் எங்களில் வா
இயலே அந்த தெளிவாய் எங்களில் வா
இயலை தேடி நடக்கின்றேன்
அதன் இயல்பை உணர துடிக்கின்றேன்
இயலே என்னில் வா
அந்த இறையே என்னில் வா
கவிதையாய் வாழ வழியில்லை
அதனால் தானே கவிதை எழுதி வாழுகின்றேன்
இயற்கையொடு வாழ இயழவில்லை
அதனால் நானே வாடுகின்றேன்
இனியும் இயங்க வலுவின்றி
இயற்கை எய்துகின்றேன் இன்று நான்
அந்த கவியே என்னில் வா
கவிதையாய் அந்த இயற்கையே என்னில் வா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக