ஞாயிறு, டிசம்பர் 23, 2007

கனவே!


மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே

நிஜமது மீண்டும்
ஒருமுறை வேண்டும்
விழிகளுக்குள் வாராய்
என் கனவே

வருவாய் என
துயில்தனில் விழித்திருக்கிறேன்
தருவாய் என
விழிகளுக்குள் பார்த்திருக்கிறேன்

சிப்பிக்குள் அரிதாய்
உதிக்கும் முத்து,
அதனினும் அரிதாய்
இமைகளுக்குள்
உதித்த கனவே
தேடுகிறேன் இன்று

நிழல் தரும் நிழலை
நிரந்தரமாக்கிப்போவாய்
என காத்திருக்கிறேன்
உறக்கத்தில்

வந்துவிடு
ஒரே ஒருமுறை,
நான் மீளா
துயில் கொள்ளும்முன்...

7 கருத்துகள்:

சிறில் அலெக்ஸ் சொன்னது…

யார் வேணும்னாலும் கவிதை போட்டியில் கலந்துக்கலாம்.

:)

உங்க கவிதைகள் நல்லாயிருக்கு..

Rasiga சொன்னது…

\\வந்துவிடுஒரே ஒருமுறை,நான் மீளாதுயில் கொள்ளும்முன்...\\

கவிதையை அர்த்தமுள்ளதாக்கியது இவ்வரிகள்.
ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் கவிதை தொகுப்புகள்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

@Rasiga said...
\\
\\வந்துவிடுஒரே ஒருமுறை,நான் மீளா
துயில் கொள்ளும்முன்...\\

கவிதையை அர்த்தமுள்ளதாக்கியது இவ்வரிகள்.
\\

அப்ப இந்த வரிகளில் தப்பினேன்னு சொல்லுங்க :)

ஆழ்ந்து இரசித்தமைக்கு நன்றி இரசிகா

தினேஷ் சொன்னது…

கண்ணிராய் கவிதை கனவு கணக்கிறது…

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ தினேஷ் said...

கண்ணிராய் கவிதை
கனவு கணக்கிறது…
//

அட இதுவே குட்டி கவிதை தான்! நல்லா இருக்கு தினேஷ்

தினேஷ் சொன்னது…

உண்மையில் எனக்கு கவிதை எழத வராது... ஆனால் என் என்னுடைய வார்த்தைகளை கவிதையாக்கி விதம் என்னை மகிழச் செய்தது... நன்றி சதிஷ்

தினேஷ்

Dreamzz சொன்னது…

//மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே
//
nice... nalla irukku.....
but try rewording with simplicity :) advice solra alavu naan periya aalu ellam illa .. sollanumnu thonuchu avlo thaan hehe no the mistake me :)