~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த‘ மல்டி டாஸ்கிங்’
-கவிஞர் நவீன் ப்ரகாஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவசரமாய் எழுதிய கவிதைகளில்
என் தோழியாய் இருந்தாய்
நீ பிரிந்து சென்றபின்
ஓர் பௌர்ணமி இரவில்
படித்துவிட்டு கலங்கினேன்
என் காதலியாய் இருந்திருக்கிறாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓடிச்சென்று நனைந்துவிட
நினைப்பதற்குள் நின்றுவிட்டது
மழை...
மண்வாசத்தில் நனைகிறது உயிர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
-கவிஞர் அறிவுமதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உள்ளயர்ந்த
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்...
- Unknown
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரசிப்பேன்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ம்ம்ம் நானும் ரசித்தவை..!! :-)
கருத்துரையிடுக