ஞாயிறு, அக்டோபர் 04, 2015

நம்பிக்கை

வேலியோ சரிந்தது
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்

நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்

விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்

விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை

தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு

அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்

கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்

எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்

எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்

இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!






  

கருத்துகள் இல்லை: