வேலியோ சரிந்தது
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்
நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்
விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்
விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை
தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு
அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்
கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்
எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்
எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்
இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்
நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்
விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்
விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை
தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு
அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்
கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்
எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்
எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்
இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக