வியாழன், நவம்பர் 19, 2009

பகடி


இருள்முகம் கொண்டு புதுநிலவு
கருமை போர்த்திய நீலவானில்
தவழும் இப்பொழுதில் பால்வீதி
கண்டு கிடக்கிறேன்...

முன்தின இரவின் கனவொன்றில்
வென்தாரிகை கருந்திரை கிழித்துவந்து
மறுஇரவில் கதைத்திருப்பதாய் உரைத்ததால்
வெளிகண்டு கிடக்கிறேன்...

அதோ அவள்! கீற்றாய் மறைந்தாள்
உதிக்கும்முன் கறைந்தது புன்னகை
அதோ அங்கே, இதோ இங்கே
அங்கிங்கெனாதபடி திரைகிழிசல்களாய்
மிளிர்கிறாள்

அவள் லீலைகள் கண்டுவியக்கிறேன்!
அவள் களிகண்டு கிடக்கிறேன்,
அவள் வாக்கு வெறும் பகடி என்றறியாது...
'
'
P.S: சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த 'Leonoid' வின்கற்கள் பொழிவை எண்ணி கிறுக்கியது

1 கருத்து:

vidhusha சொன்னது…

ungalathu padaipugal anaithum arumai..... how can i follow u sathish?