
வெய்யிலில் நடக்கிறாய் நீ
வியர்வை என் நெற்றியில் அல்ல,
என் நெஞ்சத்தில்...
மழையில் நினைகிறாய் நீ
காய்ச்சல் என் உடலில் அல்ல,
என் உள்ளத்தில்...
விழுந்தது தூசி உன் கண்ணில்
கலக்கம் என் கண்ணில் அல்ல,
என் மனதில்...
காலனியின்றி கல்லில் நடக்கிறாய் நீ
வலி என் பாதத்தில் அல்ல,
என் இதயத்தில்...
பதம் பார்த்தது கொலைகாரக்கல் உன் விரலை
வலி என் விரலில் அல்ல,
என் உயிரில்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக