
ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008
தொலைவு...

சனி, ஆகஸ்ட் 16, 2008
புனல் திருடி!!
திங்கள், ஆகஸ்ட் 04, 2008
மழைக்காலம்!

தனிமையின்
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்
அது
தனிமையின்
மதி மயங்கும்
மழைக்காலம்!
செவ்வாய், ஜூலை 15, 2008
வெறுமை...

ஞாயிறு, ஜூன் 15, 2008
அறிந்தும் அறியாமலும்!

திங்கள், மே 19, 2008
நீர்தனில்...
சனி, ஏப்ரல் 26, 2008
ஆகினாய்...

இங்கே கவிதையாகிப்போனாய்
இன்னும் இயலோடு இசையாகிப்புன்னகைக்கிறேன்
சனி, ஏப்ரல் 19, 2008
மலரா!!

முடிக்கப்படாமல்
கனவுகள் சுமந்த கவிதைகள்
மணற்குவியலின் மத்தியில்
கசங்கிய பூக்களாய்,
சோலையது பாலையாய்
இரைகள் ஏராளமாயினும்
கழுகுகள் பறக்கக்கூட
வின்னில் இடம்தாரா
போர் மேகங்கள்
உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்
எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!
'
'
நிலாரசிகன் அவர்களின் இந்த கவிதை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களின் இந்த பதிவு மூலம் பார்த்த படம், இரண்டின் தாக்கத்தில் கிறுக்கியது இது!
சனி, ஏப்ரல் 12, 2008
அனல்தனில்...

எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
திங்கள், மார்ச் 31, 2008
மீண்டும்..... காதல் :)
[எந்த காரணத்துக்காக சென்றேனோ அது நினைத்தபடி போகாததால் (வழக்கம்போல்) திரும்பிவிட்டேன்! அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)]

பட்டின் இறகுகள்,
தென்றல் தொடத்துடிக்கிறது...
உன் கண்கள் தழுவிய
என் விரல்கள் போல்
பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல்
மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்
இலைகள் போர்த்தி,
ஈரமணல் நுகரத்துடிக்கிறது...
உன் கூந்தல் மூடிய
என் முகம் போல்
பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்
'
'
ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)
திங்கள், மார்ச் 17, 2008
நிஜம் இரசிக்கும் காலம்...!
கற்பனைகள் இனிவாராது,
கவிதைகளின் வாசலது
காற்றும் சற்று தாமதிக்குது,
நினைவுகளின் முற்றம் அது
புன்னகைகளின் தொடர்சியும் அது,
இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!
கிறுக்கியவரை போதும்!
கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)
வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!
கொள்ளை அழகு...என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
அன்புடன்சதீஷ்
ஞாயிறு, மார்ச் 02, 2008
புன்னகை-தேன் :)

வானவில் புன்னகைக்கிறது
திங்கள், பிப்ரவரி 11, 2008
தொலைத்த மௌனங்கள்!
ஞாயிறு, பிப்ரவரி 03, 2008
காற்றில் ஓர் கவிதை!

சிதறிகிடக்கும் துகள்கள்
எங்கும் தெரிக்கும் குருதிகள்
காதை பிளக்கும் ஓசைகள்
நடக்க எப்போதோ மறந்துபோய்
நில்லா ஓட்டத்தில் என் கால்கள்
தாய்மண்ணின் மானம்காக்க
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்
சிதறிய துகள்களில் தாவிவிரைந்தேன்
பதறிய என்னுள்ளத்தை ஆற்றதுடித்தேன்
இடரிய முகங்களை கொன்றுகுவித்தேன்
பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்
உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!
ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று
பெற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று
என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று
என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று
விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்று
ஞாயிறு, ஜனவரி 27, 2008
ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!

மனதில் உதிக்கும் வார்த்தைகளை வரிகளாக அடுக்கி வைக்கும் ஒரு பதிவேடாக மட்டுமே இன்றுவரை என் வலைப்பதிவு இருக்கிறது.
முதன்முறையாக "ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!" என்று சில பத்திகள் என்னை எழுத வைத்த திவ்யாவிற்கு முதலில் நன்றி! நான் கிறுக்கியவைகளைப்பற்றி எழுத நல்ல சந்தர்ப்பம்.
கொஞ்சநாளாய் அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்தால் எதுவும் தோன்றவில்லை! சரி என்றாவது ஏதாவது தோன்றினால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தால் அந்த நேரம் பார்த்து தொடர் ஓட்டம் என்று என்னை இழுத்துவிட்டுவிட்டார்.
"உன் குழந்தைகளில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்று கேட்டால் என்னசொல்ல?", என்றெல்லாம் வசனங்கள் பேசினால் தாய்மையை வைத்து க(வி)தை எழுதிய திவ்யா என்னை அடிப்பார்!
2007'ல் நான் எழுதியவற்றில் எதை மிகமிக விரும்பினேன்?
இயற்கையோடு ஐக்கியமாகிவிட ஆசைகொண்டு இயற்கை எய்தவேண்டுமென்று நான் எழுதிய 'இயற்கையே என்னில் வா'
நண்பர்களின் ஆழமான காயங்களின் பாதிப்பை அருகிலிருந்து உணர்ந்ததன் விளைவாய் உதித்த 'உனக்கு பிறகான நாட்களில்'
சிலஇரவுகளில் நமை தூங்கவிடாது அதிர்வூட்டும் கனவுகளைப்பற்றி எழுதும் ஆவலில் கிறுக்கிய 'இருளில்'
அயல்தேசம் அரவணைத்தாலும் தனிமை உணர்வுகளின் பாதிப்பில் தோன்றிய 'டாலர் கனவுகள்' மற்றும் 'என் ஜன்னலோரம்'!
எழுதிவிட்டு பதியாமலே போன என் நீண்ட கிறுக்கலொன்று!
எதை சொல்ல...
முடிவில்லா பயணத்தைப்பற்றி எனக்குள் தோன்றிய எண்ணங்களில் உதித்த 'பயணத்தில்' சென்ற வருடம் எழுதிய சொற்ப பதிவுகளில் மிகமிக ஆழ்ந்து எழுதிய ஒன்று. மாலை மயங்கும் நேரமும், தொடரும் சில சிந்தனைகளின் பாதிப்பும், தனிமையில் நான் போய்கொண்டிருந்த அவ்வேளையுமாய் என்னை எழுதத்தூண்டியதன் விளைவே அந்த வரிகள்! அதை படிப்பவர்களுக்கு அதன் அர்த்தம் முழுமையாய் புரியுமா என்று அறியேன், நானே அதன் அர்த்தத்தை இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்! 2007'ல் நான் எழுதியதில் அதுவே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறேன்.
நான் எழுதிய அனைத்திலும் என்றுமே மிகவிரும்புவது 'நினைவுகள்'. தன்னுடனான நினைவுகளைப்பற்றிக்கேட்டு தன்னையும் அறியாது என்னை முதன்முதலாய் முழுநீளக்கவிதை எழுதவைத்தவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அற்புதமான என் தோழி ஒருவர். என் கண்களுக்காக மட்டுமே சில வரிகள் கிறுக்கிகொண்டிருந்த நான் முதன்முதாலாய் இன்னொருவரின் பார்வைக்காக ஆவலுடன் எழுதியது 'நினைவுகள்'! அவரின் பாராட்டுதலே வலைபதிவு தொடங்க நம்பிக்கை தந்தது.
பி.கு: வலைபதிவில் உள்ள 'நினைவுகள்' நான் பொதுவாக எழுதிய ஒன்று.
தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேர் எல்லாம் எனக்கு தெரியாதே, வலையில் என்னை தெரிந்திருப்பதே ஐந்து பேர் தானே!!
நான் தொடர் ஓட்டத்திற்கு அழைப்பது,
1. தினேஷ்
2. இரசிகா
3. நித்யா
ஞாயிறு, ஜனவரி 13, 2008
மல்லிகை இரவுகள்...

திரும்பியபின் அழகாய் தரிசித்தேன்,
அதுபோல் கூந்தலைவென்று
செவ்வாய், டிசம்பர் 25, 2007
பூக்களில் உறங்கும் மௌனங்கள்

சுயத்தின் சிந்தனைகள்
தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்
வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்
மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்
சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்
தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்
என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்
அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்
என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்
ஞாயிறு, டிசம்பர் 23, 2007
கனவே!

வெள்ளி, டிசம்பர் 14, 2007
டாலர் கனவுகள்!

பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்
விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்
நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்
உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்
தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....
சனி, டிசம்பர் 08, 2007
என் ஜன்னலோரம்...

தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்
அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே
தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ
கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்
பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ
ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ
விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே
பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே
சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...
