சனி, செப்டம்பர் 07, 2013

எழு ஞாயிறு

 

அவன் இதழ் தொட்டு எழும் என் விடியல்கள்
அவன் பார்வை தொட்டு எழும் என் இமைகள்
அவன் மேனி தொட்டு எழும் என் பகல்கள்
அவன் புன்னகை தொட்டு எழும் என் காலைகள்
அவன் விரல் தொட்டு எழும் என் ஞாயிறுகள்

எழு ஞாயிறு எழு
என் ஞாயிறு எழுந்துவிட்டான்...

சனி, ஜனவரி 05, 2013

நவிரம்




வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க
தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த

வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க
இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க

பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச
கவிதைகள்  காத்திருக்கின்றன உன் வரிகள்  ஏற்க

நிகழ்வுகள் காத்திருக்கின்றன உன் கனவுகள் சேர்க்க
கனவுகள்  காத்திருக்கின்றன உன் காலங்கள் கோர்க்க

சிகரங்கள் காத்திருக்கின்றன நீ நவிரம் தொட
யாவரும் காத்திருக்கிறோம் மழலை உன் மெய் கான

சனி, ஜூலை 28, 2012

முகை


அரும்பாய் தோன்றி
மொட்டாய் உருவெடுத்து 
முகையாய் பிறந்தவனே
மலர்வாய் அலர்வாய்
அலராய் என்றும் மனம்வீசுவாய்

திங்கள், மே 09, 2011

நிழற்படம்


உன் அசைவுகள் கைதாகி நிற்க
உன் எண்ணங்கள் சிறைபட்டு கிடக்க
உன் நிகழ்வுகள் உறைந்து போக
உன்
நிழல்கூட மறைந்து ஓட
உன் விழி சொல்லும் கதைகள் இமைகளில் தேங்க
உன் இதழ் தவழும் புன்னகையும் முடிவிலியில் சேர

இவையனைத்தும் ஒருங்கே, இதோ நான் இரசிக்க
வெட்கி நெகிழ்கிறது காற்றில், அதோ உன் நிழற்படம்

புதன், ஜனவரி 12, 2011

நமது...


கவிதைகளில் இது அரிது,
கனவுகளில் இது புதிது,
நினைவுகளில் இது இனிது,
நிகழ்வுகளில் இது அழகு,
வரிகளில் இது கடிது,
உணர்வுகளில் இது மிருது,
பதிவுகளில் இது வடிவு,
கற்பனைகளில் இது பெரிது,
மெய்களில் இது வலிது...

இறந்துபோன காலம் அது எனது,
கடந்துபோகும் காலம் இது உனது,
இனிவரும் காலம்... அது நமது!

செவ்வாய், மே 25, 2010

நதி...


இருவேறு ஆறுகளாய்
பயணித்த வெள்ளம்
ஒரே நதியாய்
இணையும் நன்நாளில்...
'
'தீதும் நன்றும்
பிறர்தர வாரா'
'
தீதாய் நிற்கும் கற்களை
நதி அடித்துச்செல்லட்டும்
'
வழிமறிக்கும் பாறைகளை
நதி மோதித்தாண்டட்டும்
'
இடைவரும் மலைகளை
நதி விட்டுவிலகிச்செல்லட்டும்
'
அரணாய் நிற்கும்
கரைகளாகும் பந்தங்களை
நதி சோலையாக்கித்தழுவட்டும்
'
இதுவே நதியாகிய
வாழ்க்கை பயணத்தின்
சாராம்சமாயாகட்டும்...
'
மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை தோழமைக்காய்...

திங்கள், மார்ச் 29, 2010

நான்... அலை


யுகங்கள் பல கடந்துவந்தேன்,
தேடல் இன்னும் தொடர

தோன்றலும் கறைதலும்
மீண்டும் பிறத்தலும் பின்
மறைதலுமாய் காலனை
வென்றுவந்தேன், என்
தேடல் இன்னும் தொடர

பஞ்சபூதங்களின் குழந்தை நான்,
பின்னே கடல்
முன்னே மணல்
நடுவே என் பயணம்,
இல்லா சுவடுகள் தேடி

மீண்டும் பிறந்து வந்தேன்
கரையில் கறைய, என்
தேடல் இன்னும் தொடர...

வியாழன், நவம்பர் 19, 2009

பகடி


இருள்முகம் கொண்டு புதுநிலவு
கருமை போர்த்திய நீலவானில்
தவழும் இப்பொழுதில் பால்வீதி
கண்டு கிடக்கிறேன்...

முன்தின இரவின் கனவொன்றில்
வென்தாரிகை கருந்திரை கிழித்துவந்து
மறுஇரவில் கதைத்திருப்பதாய் உரைத்ததால்
வெளிகண்டு கிடக்கிறேன்...

அதோ அவள்! கீற்றாய் மறைந்தாள்
உதிக்கும்முன் கறைந்தது புன்னகை
அதோ அங்கே, இதோ இங்கே
அங்கிங்கெனாதபடி திரைகிழிசல்களாய்
மிளிர்கிறாள்

அவள் லீலைகள் கண்டுவியக்கிறேன்!
அவள் களிகண்டு கிடக்கிறேன்,
அவள் வாக்கு வெறும் பகடி என்றறியாது...
'
'
P.S: சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த 'Leonoid' வின்கற்கள் பொழிவை எண்ணி கிறுக்கியது

புதன், மே 13, 2009

இலையுதிரா காலம்


முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்

கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்

அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி

ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!

வெள்ளி, மார்ச் 06, 2009

கனவுகள்

இமைகள் வழியே
வழிந்து நிற்கும் க‌ன‌வுகளை
தலை‌ய‌னை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்

ச‌ன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்

ஆதவனின் கரம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற‌
புன்னகைக்கிறேன்

இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன‌

சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன‌...

புதன், ஜனவரி 07, 2009

இடைவெளி...


வடிவமைத்த‌ எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த‌ வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல‌
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...

சனி, நவம்பர் 22, 2008

நிலவிற்கு ஓர் பயணம்!


சந்த்ரயான் (நிலவு ஊர்தி) வெற்றிகரமாய் அக்டோபர் 22, 2008 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமதனால் விண்ணில் செலுத்தப்பட்டு, மேலும் Moon Impact Probe முலமாய் குழந்தைகள் தினமன்று திரு. அப்துல் கலாம் அவர்களின் யோசனைப்படி நம் தேசியகொடியை நிலவின் முகம்தனில் பதித்தாகிவிட்டது.

வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். இந்த முயற்சியை எண்ணி இரண்டு வருடங்கள் முன்பு பதிவிட்ட ஓர் பதிவை நான் நினைவுகொள்ள விரும்புகிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.

புதன், நவம்பர் 12, 2008

எதிர்பார்த்தல்


வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்

கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌
மணல் கூட்டில்
நித்திரை பயில்கிறேன்

நிறமிழந்து வண்ணம்கொண்ட‌
சருகுகள் சாலையோரமாய்
வரவுகளேற்க,
நொறுங்கும் ஒலிகளில்
வ‌லிக‌ள் தொலைக்கிறேன்

இறகினும்மெல்லிய தாள்
சுமந்துவந்த கவிதையில்
மனதின் அறைகள் கனக்க‌,
உறையும் நொடிகளில்
உருகுபனியாகிறேன்


இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

என்ன இல்லை?


என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
என் எண்ணம் தவிர

என்ன இல்லை இங்கே
என் அன்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
அந்த அன்பைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த கனவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நினைவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நொடியைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
என் கவிதைத் தவிர

என்ன இல்லை இங்கே
இந்த தனிமைத் தவிர


யாதுமாகி நீக்கமற
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர?

('லுக்காசுப்பி (கண்ணாமூச்சி)' எனும் 'இரங் தே பஸந்தி' பாடலின் பாதிப்பில் கிறுக்கியது. முக்கியமாக அதில் வரும் 'இங்கே அனைத்தும் இருக்கின்றன இருந்தும் தாயே உணருகின்றேன் நீயின்றி தனிமையாய்' என்ற வரிகள், சொல்லத்தேவையில்லை இரஹ்மானின் இசையில்!)

சனி, செப்டம்பர் 06, 2008

மீண்டும்... காதல்! - II

'

சிறகுகளை ஏன் உதிர்த்தாய்,
வெண்புறாக்களும் இன்று
பறக்க மறுத்து
நடை பயிலுகின்றன!

தோட்டத்தில் ஏன் இதழ்பிரியா
புன்னகை சிந்தினாய்,
ரோஜா மொட்டுக்களும் இங்கே
இதழ்திறக்க மறந்தன!

புள்ளிக்கோலம் ஏன் வைத்தாய்,
தென்றலும் இதோ
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி

கோலமிடுகிறது
'
நதியினில் ஏன் நீராடினாய்,
புனலும் இதோ
ஆற்றைவிட்டு உன் இல்சுற்றி
குடியிருக்கிறது!

ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது!
'
'
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!

திங்கள், செப்டம்பர் 01, 2008

A for Apple....[tag post]

கவிதை எழுதும் பேரில் ஊரை ஏமாற்றியது போதும், ஒழுங்கா இந்த tag' அ எழுதுரவழியப்பாருனு திவ்யா மாஸ்டர் சொல்லியிருக்காங்க. அதுனால வழக்கம்போல இல்லாம மீண்டும் ஒரு கிறுக்கலில்லா பதிவு! அதுக்காக மாஸ்டருக்கு ஒரு நன்றி.

A for Avin
B for Brandy
C for Cigarette
D for Drug...

இருங்க இருங்க பயந்துராதீங்க! இந்த மாதிரி எல்லாம் நாங்க A, B, C, D சொல்லித்திரிந்த காலங்கள் (விளையாட்டுக்குதாங்க) உண்டு. அது ஒரு கனாக்காலம் :( அத பத்தி ரொம்ப யோசிச்சு ஃபீல் பண்ணா அப்புறம் கவிதைனு சொல்லி எதையாவது கிறுக்கத்தான் தோனுது :) ஆனா இதுதான் கிறுக்கலில்லா பதிவாச்சே அதுனால ஃபீலிங்க்ஸ எல்லாம் ஓரமா வச்சிட்டு tag'அ தொடருவோம்




A - http://www.answers.com/

நமக்கு ஆங்கில அறிவு கம்மி, இந்த ஊருல இருக்குறவங்களுக்கு தமிழ் அறிவே இல்ல! அதுனால எல்லா ஆங்கில வார்த்தைகளையும் இதுல பார்த்துதான் அர்த்தம் தெரின்சுக்குறது

B -
https://www.bankofamerica.com/

நான் இங்க இருக்குறதுக்கு இப்போதைய காரணகர்த்தா

C - வராத வார்த்தய வுட்டுரலாம்

D -
http://www.deals2buy.com/

எதுக்குனு உங்களுக்கே தெரியும் :)

E - http://www.enterprise.com/

எடுக்கலாமா வேணாமானு அடிக்கடி வண்டி தேடுற இடம்

F -
http://www.flickr.com/

அன்பர்கள் சுட்டுத்தள்ளும் புகைப்படங்கள் இரசிக்க

G -
http://www.google.com/

எதுனாலும் தேடிப்போவது

H -
http://www.hdfcbank.com/nri/Remittances/

டாலர நாடு கடத்த

I -
http://www.imd.gov.in/

எதோ ஒருமுயற்சிக்காய் ஒருமுறை உதவியது

J -
http://www.jaxtr.com/

உலகெங்கும் பேச

K -
http://www.kissyoutube.com/

படங்கள ஒருகாலத்தில் இறக்குமதி செய்ய உதவியது

L - http://www.lost.com/


Lost Serial பற்றி - அனைத்து எபிஸாடுகளும் பார்த்தாகிவிட்டது. ஸீஸன் 5'க்கு வெயிடிங்!

M -
http://maps.google.com/

விடுமுறை வந்தால் பெருசா பிளான் போடுறதுக்கு உதவுரது(கடைசிவரைக்கும் பிளான் மட்டும்தான் போட்டுருப்போம்)

N - வராத வார்த்தய வுட்டுரலாம்

O -
http://www.ovguide.com/

வெட்டியா நேரத்த ஓட்ட

P -
http://pgportal.gov.in/

இந்தியாவின் மக்கள் குறைதீர்ப்பு பக்கம்!

Q - வராத வார்த்தய வுட்டுரலாம்

R -
http://www.RealPlayer.com/

விளக்கம் தேவையில்லை

S -
http://www.space.com/

அப்பப்ப டைம்பாஸ் பண்றதுக்கு

T -
http://www.tamildict.com/

நமக்கு தமிழ் அறிவும் கம்மி அதுக்குதான் இந்த இடம் :)

U - வராத வார்த்தய வுட்டுரலாம்

V -
http://www.videoembedder.com/

எதுக்குனு நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க

W -
http://watch-movies.net/

காசில்லாம படம் பாக்க

X - வராத வார்த்தய வுட்டுரலாம்

Y -
http://www.yahoo.com/

விளக்கம் தேவையில்லை

Z -
http://www.zango.com/

சும்மா டைம்பாஸ்க்கு


அம்புட்டுதான் மக்களேஸ்!!

ஏதோ மூனுபேர மாட்டிவிடனுமாமே! அதெல்லாம் முடியாது, ஏன்னா நமக்கு அவ்வளவு பேரெல்லாம் தெரியாது (மூனுங்கறது அவ்வளவு பேரிய நம்பரான்னு கேக்குரீங்களா ஹி ஹி)

பதிவுலகில் எனக்கு முன்னோடியும், சில கிறுக்கல்கள் முயற்சி செய்துபார்க்கும் ஆர்வம் எனக்குள்ளும் தோன்ற முதற்காரணமுமாய் இருந்தது (அறியாமலே) என் தோழன் ஒருவன். அவன் என்ன மாதிரி இல்ல உண்மையிலேயே நல்ல கவிஞன் இருப்பினும் பதிவுலகில் அத்துனை ஆர்வமில்லாதவன். அதனால அவன மாட்டிவிடுறதே சரி :)



நான் அழைப்பது,

மதி

[நண்பர்களே அவனோட பதிவில் நிறைய கமண்டி தோழனை நிறைய கவிதை எழுதவைப்பது உங்க பொருப்ஸ்! வரட்டா :)]

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

தொலைவு...


தினமும் கடக்கும்
விடியலில் காத்திருந்தும்
இந்த விடியலிலும்
மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே
உன் தொலைவை
திறக்க முயலாமல்
இந்த விடியலும்
கடந்து போக
மலரா இந்த
இரவின் அகாலத்தில்,
அர்த்தம் தொலைத்த
மெளனத்தின் இரங்கல்
புன்னகையுடன், நான்
தொலைந்து நிற்கின்றேன்...

சனி, ஆகஸ்ட் 16, 2008

புனல் திருடி!!

'

அலையாய் எனை விரட்டப்பார்பாயோ!

ஏ கடலே! கேள்...

உன்னிலிருந்து...

...நீர் கவர்ந்து சென்று,

உனை மணல் கொண்டு மூடுவேன்!!

கிளிக்கிய இடம் : விர்ஜினியா கடற்கரை!

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

மழைக்காலம்!


அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்

நினைவுகளின் தூறலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்

விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்

தூறலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது

அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்!

செவ்வாய், ஜூலை 15, 2008

வெறுமை...


கால்தடம் பதியா கடற்கரையின்
மிருதுமணல் தழுவிச்செல்லும்
நுரைகளின் வெடிப்பில்!

கவிபடைக்கும் கண்கள் காணா
கானகத்தின் ஊடே இதழ்மலர்ந்த
பூக்களின் சிரிப்பில்!

நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!

முற்றுபெற்ற நிகழ்வுகளின்
முற்றுபெறா நினைவுகளின்
விழிவழி தனிமை நீரில்!

கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்!

நூற்றாண்டுகளை கடக்கும்
ஆசையை திணிக்கும்
நகரா இந்த நொடிகளில்!


என எதிலெதிலோ
தேடமுயல்கிறேன்
உயிருணர்த்தும்
சில வலிகளை...