திங்கள், செப்டம்பர் 18, 2006

மழை... மனம்... காதல்...


மழை துளியில் ஒளியின் சிதறல்
வின்னில் வானவில்...
என் விழித்திரையில் அவள் பிம்பத்தின் சிதறல்
மனதில் காதல்...

சிப்பி என்னும் கூட்டிற்குள்
மழைத்துளியின் குடியிருப்பு முத்து...
என் மனதெனும் வீட்டிற்குள்
அவளின் குடியிருப்பு காதல்...

மணல் மேட்டுடன் மழைதுளியின்
கூடல் மண்வாசனை...
என் மனதெனும் ஏட்டுடன் அவள்
விழித்துளியின் கூடல் காதல்...

விளைநிலத்தில் மழைத்துளியின்
சங்கமம் தானியம்...
மனதில் அவளுடனான நொடிகளின்
சங்கமம் காதல்...

மலரின் இதழ்களில்
மழையின் துளிகள் - அழகிய காட்சி...
மனதின் அறைகளில்
அவளின் நினைவுகள் - அழகிய காதல்...

இரசித்தவை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் சாம்பல் ஆனாலும்

என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீது உனக்காக

சில பூக்கள் பூக்குமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீ
மடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்பத்தில் பிறந்து இன்பதில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடவுள் மனிதனை படைத்தானா

கடவுளை மனிதன் படைத்தானா

இரண்டு பேரும் இல்லையே ரொம்பத்தொல்லையே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனதினில் பலகோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

திங்கள், செப்டம்பர் 04, 2006

இரசித்தவை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த‘ மல்டி டாஸ்கிங்’

-கவிஞர் நவீன் ப்ரகாஷ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவசரமாய் எழுதிய கவிதைகளில்
என் தோழியாய் இருந்தாய்
நீ பிரிந்து சென்றபின்
ஓர் பௌர்ணமி இரவில்
படித்துவிட்டு கலங்கினேன்
என் காதலியாய் இருந்திருக்கிறாய்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை...
மண்வாசத்தில் நனைகிறது உயிர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

-கவிஞர் அறிவுமதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உள்ளயர்ந்த
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்...

- Unknown
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006

எது அழகோ?


எது அழகோ...
புற்களின் மத்தியில் மின்னும்
பனித்துளி...
இமைகளின் நடுவில் ஒளிரும்
அவள் விழி...

எது அழகோ...
தென்றலுடன் தோள்தொட்டு சிறகடிக்கும்
அவள் துப்பட்டா...
போட்டியாய் அதன் மேல்தொட்டு பறக்கும்
அவள் கூந்தல்...

எது அழகோ...
அடிக்கும் குளிருக்கு துப்பட்டா
அவளுக்கு போர்வையாவது...
போடும் தூறலுக்கு அதுவே
அவளுக்கு குடையாவது...

எது அழகோ...
தலை தாழ்த்தி விழிசுடர் தூக்கி
மெலிதாய் ஒரு புன்னகை...
தலை சாய்த்து ஒரு கண் மூடி
பெரிதாய் ஒரு சிரிப்பு...

எது அழகோ...
தன்னைத்தானே அவள் சுற்றும்போது
அவளை சுற்றும் ஒற்றை ஜடை...
துள்ளிக்குதித்து அவள் வரும்போது கற்றில்
அலையென பறக்கும் அவள் விரிந்த கூந்தல்...

தனியாய் ஓர் பயணம்...


கடல் கடந்து தேசம் கடந்து அங்கோர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

உறவைப்பிரிந்து உணர்வைப்பிரிந்து
தூரத்தில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

இதுவரை கண்டு இதுவரை உணரும்
நிகழ்காலமிதை விடுத்து தொலைவில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

இதுவரை காணாத இதுவரை உணராத
அந்நியத்தில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

உன்ன உணவில்லை உறைய இடமில்லை
சோதனையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

என்னவளை கண்டு மாதங்கள் ஆகின்றது
எனை ஈன்றவளை கண்டு வருடங்கள் ஆகின்றது
வேதனையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

சுற்றிலும் மனிதர்கள் நம் இனத்தவர்கள்
இருந்தும் ஒவ்வொருவரும் தனித்தனியே
தனிமையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி இதோ.. தனியாய் ஓர் பயணம்...

வியாழன், ஆகஸ்ட் 24, 2006

புன்னகைகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கையிலேந்தி
உலாவியபோது
சட்டென்று
கழுத்தைப்பற்றி
கன்னத்தில் முத்தமிட்ட
மழலை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தீபாவளி இரவில்
வெடிகள் தீர்ந்துபோக
வெடிக்கமறுத்திருந்த
வெடிகளின் மருந்துகளில்
சொக்கபானம் வைத்து
வேடிக்கை காட்டிய
அண்ணன்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விலகிச்செல்லும்
இரயிலின் வாசலோரமாய்
மோழியாத வார்த்தைகளை
வெல்லுமாறு கண்ணீர்
கலந்த புன்னகையுடன்
கடைசியாய்
கையசைத்த அவள்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தொடரும்...

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

நினைவுகள்...


காலம், அது விரைந்து போகும்
பல நினைவுகள், அதில் கறைந்து போகும்
சிலரைப்பற்றிய நினைவுகள்
அதனில் அந்த காலம் கூட மறைந்து போகும்

மனதில் நிறைந்திருக்கும் நினைவுகளை எவ்வாறு எடுக்க?
எடுத்த அந்த நினைவுகளை எவ்வாரு அடுக்க?
ஒன்றா இரண்டா அவைகள், இருவரிகளில் தொடுக்க!

சிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் மறைந்துபோகின்றன
வேறுசிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் வலுபெருகின்றன

இன்னும் சிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போதும்
அங்கே நினைவுகள் மறைந்துபோகவோ வலுபெறவோ
அவசியமற்று போகின்றன

நினைவுகளின் தாக்கம்...
அருகிலிருந்தும் பலர் தொலைவாய்!
தொலைவிலிருந்தும் சிலர் அருகாய்!!

வாழ்க்கை எனும் தோட்டத்தில் சந்திப்புகள் செடிகளாகலாம்

சந்திப்பு எனும் செடியில் அறிமுகங்கள் பூக்களாகலாம்,
காலப்போக்கில் வாடக்கூடியவை அவை
யுகப்போக்கில் முகம் மறந்து போகலாம்

சந்திப்பு எனும் செடியில் நினைவுகள் விதைகளாகலாம்,
விருட்சங்களை தாங்கி நிற்க்கக்கூடியவை அவை
விதைக்கப்பட்டு பின் மீண்டும் உதிக்கும் மலரும் நினைவுகளாகலாம்

காலம், அது விரைந்து போகும்
பல நினைவுகள், அதில் கறைந்து போகும்
சிலரைப்பற்றிய நினைவுகள்
அதனில் அந்த காலம் கூட மறைந்து பொகும்.....

துளிகள் I

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவளாய்

சிலநிமிடங்களில் சேயாய்
பலதருணங்களில் தாயாய்
அன்னையாய் தோழி,
பலகணங்களில் சேயாய்
சிலகாலங்களில் தாயாய்
அன்பாய் காதலி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓவியம்


இதழ்களால் உச்சரித்து
கண்களால் வழிகாட்டி
விரல்களால் பேனாவை இயக்கி
ஓர் ஓவியம் கவிதை வரைவதை
தரிசித்தேன் - அவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை...

கவிதை இயற்ற எத்தனித்தேன்
அவனுக்கு ஈடாய்,
ஆனால் என்செய்வேன் தோற்றுப்போனேன்...
உனை போன்ற அழகிய கவிதை வடிக்க

அவனால் மட்டுமே முடியும் - இறைவன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபம்...

பூப்போன்ற இட்லிக்கு கோபம்,
பூவைவிட மென்மையான
அவள் விரல்கள் படாதபடி
இடையில் நீள்கிறது தேக்கரண்டி!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வடித்ததில்லை...

வடித்ததில்லை - கருப்புத்திரையில் பயணிக்கும்
வெள்ளை பௌர்ணமியை கவிதையில்
வடித்தவர் மத்தியில்,
வெள்ளைத்திரையில் உலாவும்
அவள் கருப்பு விழியைப்பற்றி கவிதை
இதுவரை எவரும் வடித்ததில்லை!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவும் பகலும்...

ஒளி வீசும் ஞாயிரை எந்திய பகலாய்
பிரகாசமான அவள் முகம்,
அதை தழுவியபடி;
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை தாங்கிய இரவாய்,
நீர்த்துளிகள் கோர்த்த
(துவட்டப்படாத) அவள் கூந்தல்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...